தாமிரபரணி புஷ்கர விழா : ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி
தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி நடைபெற்றது.
சண்டி ஹோமத்தில் வைக்கப்பட்ட தங்க குடத்தில் உள்ள புனிதநீர் தாமிரபரணி ஆற்றில் ஊற்றப்பட்டது. அதை அடுத்து மஹா பரணி தீப மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது 5 வகையான மங்கள ஆரத்தி காட்டிய பின்னர் பக்தர்களும் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் .