வீடு புகுந்து கொல்லப்பட்ட விவசாயி... உடனே உறவினர்கள் எடுத்த முடிவு

Update: 2024-05-04 08:11 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மேல்தொம்பை பகுதியை சேர்ந்தவர் ஜோதிவேல். விவசாயியான இவருக்கும் அவரின் பக்கத்து காட்டுக்காரர் ராஜூ என்பவருக்கும் இடையே வரப்பு தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக இரு குடும்பத்தாரும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், ஜோதிவேல் வீட்டிற்குள் புகுந்த ராஜூ, ஜோதிவேல், அவரின் மனைவி நீலாவதி மற்றும் சகோதரர் ராமசாமி ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜோதிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்ததால், உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். மேலும், குற்றவாளி கைது செய்யப்படும் வரை, இறந்த உடல்களை வாங்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்