சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்... டாக்டரை புரட்டி எடுத்த உறவினர்கள்

Update: 2024-05-04 07:52 GMT

ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் விழுப்புரத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிற்கு பிசியோதெரபி சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி மருத்துவர் சந்தோஷ் குமார் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் கூச்சலிட்டத்தையடுத்து, பெண்ணின் உறவினர்கள் உதவி மருத்துவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பெண்ணின் உறவினர்கள், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்