ரெட் அலர்ட் என்றால் என்ன..?

தமிழகத்தில் வரும் 7 தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், அதன் விளைவுகள் பற்றியும் மற்ற அலர்ட் விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்..

Update: 2018-10-05 04:39 GMT
மழையின் அளவை முன்கூட்டியே கணித்து, அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே அலர்ட் விடப்படுகின்றன. கிரீன் , யல்லோ, ஆம்பர், ரெட் என அலர்ட் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மழையின் அளவை பொறுத்து அலர்ட் வகை மாறுபடுகிறது...

மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டாலே கிரீன் அல்லது பச்சை அலர்ட் விடப்படுகிறது. கிரீன் அலெர்ட்டால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதால், இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மழைக்கு தயாராக இருக்க வேண்டும் என சொல்வதற்கே கிரீன் அலர்ட் விடப்படுகிறது.

வானிலை மோசமாக உள்ளது என்பதை அறிவுறுத்தும் விதமாக யல்லோ அலர்ட் விடப்படுகிறது. இந்த அறிவிப்பு விடப்பட்டால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. 

அடுத்த‌தாக ஆம்பர் அலட்ர்ட்... உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படக்கூடிய அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்தவே ஆம்பர் அலர்ட் விடுக்கப்படுகிறது.

இந்த அலர்ட் விடப்படும் சமயங்களில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், பொதுமக்கள் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். மொத்த‌த்தில் மக்கள் அடிப்படை தேவைகளுடன் எப்போது வேண்டுமானாலும் மாற்று இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தவே ஆம்பர் அலர்ட் விடப்படுகிறது..

இறுதியாக ரெட் அலர்ட்... வானிலை மிக மிக மோசமாக மாற வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்குமாறு உணர்த்தவே ரெட் அலர்ட் விடப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கப்பட்டால்  நிலச்சரிவு, மரங்கள் வேறோடு சரியவும் வாய்ப்பு இருப்பதால்,  அனேக இடங்களில் மின் இணைப்பு, போக்குவரத்து துண்டிக்கப்படும். தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தும் வகையில் ரெட் அலர்ட் விடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்