கரும்பாலை உரிமையாளர்கள் கடன் செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு..

கரும்பு ஆலை உரிமையாளர்கள், தாங்கள் வாங்கிய கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை, நீட்டிக்க வகை செய்யும், அரசாணையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2018-09-19 14:50 GMT
* கடந்த ஜுலை 30 ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த கரும்பு ஆலை உரிமையாளர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மாநிலத்தில் நிலவும் வறட்சியினால், கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு, பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தனர். 

*  இதனை ஆய்வு செய்த பிரதமர், உணவுத்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பேரிடர் என்று மாநில அரசு அறிவித்திருக்குமேயானால், அந்த பகுதியில் உள்ள கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்