பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பான கோப்புகள் நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பப்படும் - விஜய் நாராயணன்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.
* மேலும் 7 பேரின் கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்றார்.
* இதுபோன்ற விவகாரங்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தாலும் அதனை மீண்டும் பரிசீலிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும், இலங்கை பிரஜையாக இருந்தாலும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உள்ளது என்றும் விஜய் நாராயண் தெரிவித்தார்.