பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பான கோப்புகள் நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பப்படும் - விஜய் நாராயணன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-10 11:26 GMT
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.

* இதுதொடர்பாக தந்தி டிவிக்கு பிரத்யேகமாக தகவலளித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு எழுத்துப்பூர்வ சட்ட ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறினார். 

* மேலும் 7 பேரின் கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்றார். 

* இதுபோன்ற விவகாரங்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தாலும் அதனை மீண்டும் பரிசீலிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும், இலங்கை பிரஜையாக இருந்தாலும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உள்ளது என்றும் விஜய் நாராயண் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்