பேரிடர் காலங்களில் உதவும் வகையில் ரோபோக்கள் - பொறியியல் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கல்லூரிகளுக்கு இடையேயான ரோபோடிக் போட்டி

Update: 2018-07-21 07:29 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூர் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான ரோபோக்கள் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. டெல்லி, மகாராஷ்டிரா,  கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இயற்கை பேரிடர் காலங்களில் உதவும் வகையில் மாணவர்கள் தயாரித்த ரோபோக்களின் சோதனை ஓட்டம் நடந்தது. அதன் தன்மை மற்றும் திறன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்