4 வயது மகனின் எலும்புக்கூடுகளை பைக்கில் எடுத்து சென்ற தந்தை - கண்கலங்க வைக்கும் காட்சிகள்

Update: 2024-05-10 14:09 GMT

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள புர்கா கிராமத்தில், நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சந்தன் ராஜ் என்ற 4 வயது மாற்றுத்திறனாளி குழந்தை உடல் கருகி உயிரிழந்தது. இந்நிலையில், உயிரிழந்த தனது மகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெஹந்த்வானி மருத்துவமனைக்கு உடலை எடுத்து செல்ல அவரது தந்தை முற்பட்டும், இறுதிவரை ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தந்தையே, மகனின் எலும்புக்கூடுகள் மற்றும் சாம்பலை கூடையில் வைத்து அதனை ஆரஞ்சு நிற துணியால் சுற்றி பைக்கில் எடுத்து சென்றுள்ளார். இச்சம்பவத்தின், வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்