சர்வதேச டி20 தொடரில் பங்கேற்க செல்லும் முஸ்தாபிசுர் ரகுமான்... மே 1-ஆம் தேதி வரை சி.எஸ்.கே அணியில் விளையாட அனுமதி

Update: 2024-04-17 23:31 GMT

வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் மே 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் வங்கதேச வீரர் முஸ்தாபிசூர் ரகுமான், வரும் 30-ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மே ஒன்றாம் தேதி வரை சென்னை அணிக்காக விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ மற்றும் சென்னை அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, முஸ்தாபிசுருக்கான அனுமதி மே 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்