பரபரக்கும் IPL கிரிக்கெட் களம்..சிக்கிய நபர்கள்.. "மக்களே உஷார்.." பிசிறு தட்டாமல் தட்டி தூக்கிய காவல்

Update: 2024-04-30 02:35 GMT

ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பவர்களை கண்காணித்து, அவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் திருவல்லிக்கேனி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ளசந்தையில் விற்றது தொடர்பாக 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 72 ஆயிரத்து 242 ரூபாய் மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல், சென்னை சவுகார்பேட்டை பகுதியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சந்தீப், கணேஷ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். கைதான 6 பேரும் இணைய தளம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.....

Tags:    

மேலும் செய்திகள்