கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-01-25 08:07 GMT
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடர் கேமரூனில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுப் போட்டியில் கேமரூனும் கோமரோஸும் மோதின. இந்தப் போட்டியைக் காண கேமரூன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் மைதானத்தில் குவிந்திருந்த நிலையில், போட்டி முடிந்து ரசிகர்கள் வெளியேறும்போது நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்