கனவு நிஜமாகி உள்ளது; தேசத்திற்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் - டுவிட்டரில் சானு நெகிழ்ச்சி

ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது கனவு நிஜமாகி உள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு கூறியுள்ளார்.

Update: 2021-07-24 16:17 GMT
ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது கனவு நிஜமாகி உள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்த தனது தாய்க்கு நன்றிகளை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றிப் பதக்கத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதாகவும், மீராபாய் சானு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்