வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்துங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஹரியானா அரசு உத்தரவு

விளையாட்டு துறையை ஊக்குவிக்க விளையாட்டு வீரர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்த வேண்டும் - ஹரியானா அரசு

Update: 2018-06-08 13:10 GMT
விளையாட்டு துறையை ஊக்குவிக்க, தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. ஹரியானா மாநில விளையாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு விளையாட்டு வீரர்களை இருண்ட காலத்திற்கு அழைத்து செல்லும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்