கடுமையாக கண்டித்த ஈபிஎஸ்

Update: 2024-04-23 16:28 GMT

மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறி, நிர்வாகிகளை கண்டித்ததாக தெரிகிறது. மேலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது சரியாக செயலாற்றவில்லை என அவர் கூறியதாகவும், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எவ்வித குறைகள் இல்லாமல் பணியாற்ற அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்