தமிழகத்தில் திமுகவும், பாஜகவும் கள்ள கூட்டணியில் இருப்பதாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தனல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் நாளன்று, பாஜக மற்றும் பாமகவினர் அதிமுக தொண்டரை தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, டிஜிபி அலுவலகத்தில் அதிமுகவினர் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, தாக்குதலில் ஈடுபட்ட பாஜக கூட்டணியான பாமகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், காயம் அடைந்த அதிமுக தொண்டர் உலகநாதன் மீது வழக்கு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் திமுக - பாஜகவோடு கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்...