போலி பட்டதாரி சான்று - ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் மீது, போலி பட்டதாரி சான்றிதழை சமர்ப்பித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-14 04:27 GMT
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் மீது, போலி பட்டதாரி சான்றிதழை சமர்ப்பித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவப்னா சுரேஷ் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், போலி சான்று தயாரித்து சமர்ப்பித்து ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டி அரசு நிறுவனமான கே.எஸ்.எல்.டி மேலாண்மை இயக்குநர் ஜெயசங்கர் பிரசாத், அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்த 2 தனியார் ஐடி நிறுவனங்களும் இந்த வழக்கில் பிரதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்