முதலீட்டு ஈர்ப்பு விவரங்களை வெளியிட வேண்டும் - கீ.வீரமணி

இ.பி.எஸ் , ஓ.பி.எஸ் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் முதலீட்டு ஈர்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-11-11 11:30 GMT
இ.பி.எஸ் , ஓ.பி.எஸ் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் முதலீட்டு ஈர்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்  என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார். சென்னை வேப்பேரியில் தி.க.வின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ.பி.எஸ்., ஓபி.எஸ் ஆகியோரின் வெளிநாட்டு பயணம் வேறு என்றும், முதலீடுகளை ஈர்க்க செல்லும் வெளிநாட்டு பயணம் வேறு என்றும் விமர்சனம் செய்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை திசை திருப்பவே மதவாதங்கள் முன்னிறுத்தப்படுவதாக தி.க. தலைவர் கீ.வீரமணி குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்