"காங். வேட்பாளர் 'டக் அவுட்' ஆகிவிடுவார்" - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலில் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

Update: 2019-10-06 19:14 GMT
நாங்குநேரி  சட்டமன்ற இடைத்தேர்தலில், போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாரயணனை ஆதரித்து, அமைச்சர் ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால், காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்