பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பான விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்
பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த புகார் மனுவில், நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், கடந்த இருநாட்களாக பிரதமரின் கேதார்நாத் பயணம் ஊடகங்களில் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.