புதுச்சேரி : "துணை நிலை ஆளுநரை எதிர்த்து கோமாளித்தனமான அரசியல்" - ரங்கசாமி

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் நிறுவனருமான ரங்கசாமி, தேங்காய்திட்டு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2019-04-04 02:38 GMT
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் நிறுவனருமான ரங்கசாமி, தேங்காய்திட்டு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதால் தான், இளைஞரை வேட்பாளராக நிறுத்தி உள்ளதாகவும், இளைஞர்களால் தான் முழுமையாக பணியாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை எதிர்த்து கோமாளித்தனமான அரசியல் நடைபெற்று வருவதாகவும், அது ஒரு நாடகம் எனவும் ரங்கசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்