திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

சென்னையில் திமுக சார்பாக இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-09 06:26 GMT
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக கட்சியினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், கஜா புயல் மற்றும் நீட் காரணமாக மாணவர் தற்கொலையின்போது பிரதமர் மோடி தமிழகம் வரவில்லை எனவும் தற்போது தேர்தலுக்காக தமிழகம் மீது திடீர் பாசம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். தேர்தலுக்காகவே 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினர். ஆ.ராசா பேசுகையில், நெருக்கடி கால மிசா கொடுமையை அனுபவித்தவர் ஸ்டாலின் எனவும் ஐ.நா. அறிவித்த உடனேயே, மாற்றுத் திறனாளி என அழைப்பதை அமல்படுத்தியவர் கருணாநிதி எனவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்