அனைத்து வாக்குசாவடிகளில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் - தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

Update: 2019-02-05 20:32 GMT
வரும் நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின் போது  தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வரும் மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியதை, பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்