அரசைக் கண்டித்து அ.ம.மு.கவினர் உண்ணாவிரதம்
வளர்ச்சி திட்டப் பணிகள் தேங்கி கிடப்பதாகக் கூறி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் சிலை அருகே அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில், அப்பகுதி மக்களும் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவு உரை ஆற்ற உள்ளார்.