"ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும்" - ராகுல்காந்தி

ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார்.

Update: 2018-09-01 05:28 GMT
ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், ரபேல் போர் விமானம் தற்போது படுவேகம் எடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசப்போவது நிச்சயம் என்றும், இது இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். பிரான்சில் இதுதொடர்பாக பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது என அனில்ஜியிடம் சொல்லுங்கள் மோடிஜி என்று தமது டுவிட்டர் பக்கத்தில், ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்