``முஸ்லீம்களை SC என அறிவிக்க காங்கிரஸ் திட்டம்'' - அணுகுண்டையே தூக்கி வீசிய பாஜக

Update: 2024-04-26 07:25 GMT

எஸ்சி, எஸ்டி, ஓபிசி உரிமைகளைப் பறித்து அவற்றை இஸ்லாமியர்களுக்கும் வழங்குவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்...

நாட்டின் வளங்களில் முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு என்று காங்கிரஸ் சொல்லும் நிலையில், அந்த முதல் உரிமை ஏழைகளுக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுவதாக நட்டா குறிப்பிட்டுள்ளார்... நாட்டின் சொத்துகளில் முஸ்லீம்களுக்கே முன்னுரிமை என்று மன்மோகன் சிங் தவறுதலாக சொல்லவில்லை... அதை [வேண்டுமென்றே தான் சொல்லியிருக்கிறார் என தெரிவித்த நட்டா, தலித்துகளை விட மோசமான நிலையில் இஸ்லாமியர்கள் இருப்பதாக சச்சார் கமிட்டி மூலம் பொய்யான அறிக்கைகளைக் காட்டி முஸ்லிம்களை எஸ்சி என்று அறிவித்து அவர்களுக்கு எஸ்சி இடஒதுக்கீடுகளை வழங்க காங்கிரஸ் ஏற்கனவே ஒரு தளத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்