பிரபல தொழிலதிபரை வெறி தீர கொடூரமாக தாக்கிய சொந்த மகன் - பார்க்கவே முடியாத நெஞ்சை உலுக்கும் வீடியோ

Update: 2024-04-26 07:17 GMT

பெரம்பலூரில் முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு நேர்ந்த

கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது.

பெரம்பலூரில் முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு நேர்ந்த

கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது.

மனதை பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சியில்... முதியவரை கண்மூடித்தனமாக தாக்குவது அவருடைய மகன் என்பதும், தந்தைக்கும் மகனுக்குமிடையேயான சொத்து தகராறே இதற்கு காரணம் என்பதும் பலரையும் பதற வைத்திருக்கிறது...

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முதியவர் குழந்தை வேலு...

மனைவி மற்றும் திருமணமான மகனுடன் சேர்ந்து கூட்டாக வசித்து வந்த இவர், பெரம்பலூர் மற்றும் சேலம் தலைவாசல் பகுதியில் சொந்தமாக ரைஸ் மில்லும், ஜவ்வரிசி தொழிற்சாலையும் நடத்தி வந்திருக்கிறார்...

இந்த தொழிற்சாலைகளை தன் மகன் சந்தோசுடன் சேர்ந்தே குழந்தை வேலு கவனித்து வந்த நிலையில், திடீரென தன் பெயரிலான சொத்துக்கள் சிலவற்றை மகளுக்கு எழுதி வைத்த முதியவர்... மகனுக்கான சொத்துக்களை தான் உயிரிழக்கும் தருணத்தில் தான் எழுதி வைப்பேன் என சொன்னதாக தெரிகிறது...

மகன் ஊதாரித்தனமாகவும்... பொறுப்பில்லாமலும் சுற்றித் திரிந்ததே இதற்கு காரணம் என்றும், அதனால் தான் மகனை தனக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கவனிக்க சொல்லி.. அதை வைத்து அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது...

இந்த சொத்துப் பிரச்சினையால், தந்தைக்கும் மகனுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில்.. வீட்டின் முன் அமர்ந்திருந்த குழந்தைவேலுவை அவரது மகன், தந்தை என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கியதே இந்த கொடூரத்தின் உச்சம்..

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் காண்போரின் மனதை ரணமாக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி 16 அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது...

3 நாட்களிலே முதியவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இது குறித்து அவர்களுடைய குடும்பத்தினர் போலீசில் புகார் ஏதும் அளிக்காமல் கமுக்கமாக இருந்துள்ளனர்...

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர், திடீரென மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. உடனே, முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சம்பவத்தன்று முதியவர் மது அருந்திவிட்டு உறங்கச் சென்றதாகவும், இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது...

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில்.. அதனை நேரில் கண்டு ஆத்திரத்தில் இருந்த உறவினர் ஒருவர்... தற்போது முதியவர் உயிரிழந்த செய்தியை கேட்ட ஆத்திரத்தில், பிப்ரவரி மாதம் நடந்த சம்பவத்தின் சிசிடிவியை வெளியிட்டு அத்தனையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்...

இருப்பினும், முதியவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்த போலீசார்... ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதியவரின் மகன் மீது வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்