சிறையில் ஹார்ட் அட்டாக்.. பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம் -உ.பி.யில் பதற்றம்

Update: 2024-03-29 05:17 GMT

சிறையில் ஹார்ட் அட்டாக்.. பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம் -உ.பி.யில் பதற்றம்

உத்தரப் பிரதேசத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பாண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு வியாழக்கிழமை இரவு வாய்தி ஏற்பட்டதை அடுத்து மயக்கம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று கூறியதாக முக்தார் அன்சாரியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 5 முறை எம்எல்ஏவாக இருந்த முக்தார் அன்சாரி மீது, 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எட்டு வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்