இளம்பெண்ணின் புர்காவைக் கழற்ற வைத்து அத்து மீறிய ஆசாமிகள் - 2 பேர் கைது

போபால் நகரில் சாலையில் இளம்பெண்ணின் புர்காவைக் கழற்ற வைத்து அத்து மீறிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-18 07:21 GMT
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், புர்கா அணிந்திருந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் தனது  காதலருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்த சிலர், புர்காவைக் கழற்ற வற்புறுத்தியதால்,  இளம்பென் புர்காவை அவிழ்த்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில், போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து 2 பேரைக் கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய போலால் டி.ஐ.ஜி இர்ஷாத் வாலி, யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாது என்பதால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில், அவர்களைப் பற்றி பொது வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்