பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

Update: 2021-06-24 09:55 GMT
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'நீரவ் மோடி, லலித் மோடி என திருடர்கள் அனைவரும் மோடி என்பதை குடும்ப பெயராக கொண்டிருப்பதாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜரானார். 

Tags:    

மேலும் செய்திகள்