நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4லட்சத்தை நெருங்கியது
கொரோனா 2-வது அலை வேகமாகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்குகிறது.
கொரோனா 2-வது அலை வேகமாகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்குகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 87 லட்சத்து 62ஆயிரத்து 976ஆக உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில்,31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.