தேர்தல் ஆணைய முடிவுக்கு மம்தா எதிர்ப்பு: இன்று மதியம் தர்ணா - மம்தா அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் பிரசார தடை உத்தரவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-13 04:08 GMT

தேர்தல் ஆணையத்தின் பிரசார தடை உத்தரவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மம்தா, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்பற்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் 12 மணி முதல் கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்