2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது தவணை மருந்தை செலுத்திக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது தவணை மருந்தை செலுத்திக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை வெல்லும் வழிகளில் தடுப்பூசியும் ஒன்று என்பதால், தகுதியான நபர்கள், உடனடியாக தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.