கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் பலி...மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் பலி...மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

Update: 2021-04-05 03:36 GMT
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி, மருத்துவமனை வளாகத்தில் இருந்த அலுவல் அறைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பெண்ணின் கணவர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்தனர். மருத்துவமனை ஊழியர்கள் தீயை உடனடியாக அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்