ஏழுமலையான் கோவிலில் தெப்ப உற்சவம் - மலையப்ப சுவாமி ராமர் அலங்காரத்தில் உலா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பங்குனி மாத தெப்ப உற்சவம், கோலாகலமாக நேற்று தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பங்குனி மாத தெப்ப உற்சவம், கோலாகலமாக நேற்று தொடங்கியது. மலையப்பசுவாமி ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி, சீதை, லட்சுமணர், அனுமன்ஆகியோருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா நோய் தொற்று காரணமாக தெப்பக்குளத்திற்குள் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.