இருசக்கர வாகன பேரணிக்கு தடை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

இருசக்கர வாகன பேரணியை வாக்குப்பதிவுக்கு, 72 மணி நேரத்திற்கு முன்பாக அரசியல் கட்சிகள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-22 17:03 GMT
இருசக்கர வாகன பேரணியை வாக்குப்பதிவுக்கு, 72 மணி நேரத்திற்கு முன்பாக அரசியல் கட்சிகள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சில சமூக விரோத சக்திகள் பைக்குகளை உபயோகித்து வாக்காளர்களை மிரட்டி வாக்களிக்க அழைத்து செல்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட  தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பைக் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று  வாக்குப்பதிவு நாளிலும் பைக் பேரணிக்கு அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்