காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கவுள்ளது... தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த 4ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் உத்தரவுபடி கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்று இன்றைய கூட்டத்தில் புகார் செய்ய தமிழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 1 முதல் நேற்று வரை 7.3 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்திருக்க வேண்டும்... ஆனால் 2.3 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.