கொரோனா தடுப்பூசி : "முக்கிய பிரச்சினையை அரசியலாக்குவது அவமானகரமானது" - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா தடுப்பூசி போன்ற முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது அவமானகரமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-04 03:00 GMT
கொரோனா தடுப்பூசி போன்ற முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது அவமானகரமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பாஜக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டேன் என்று அகிலேஷ் யாதவ் கூறி இருந்தார். முன் கூட்டியே தடுப்பு மருந்தை பாஜக அரசு வெளிக்கொண்டுள்ளதாக,  சசிதரூர், மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், முக்கியமான இந்த விவகாரத்தை அரசியலாக்குவது அவமானகரமானது என்று அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். நாட்டின் அறிவியல் ஆராய்ச்சிகரமான முடிவுகளை இழிவுபடுத்த முயற்சிக்காதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்