"1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்" - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஆயிரம் இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-20 05:15 GMT
ஆயிரம் இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 50 எரிவாயு நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் நாட்டி பேசினார். எதிர்காலத்தில் திரவநிலை இயற்கை எரிவாயுதான் போக்குவரத்து எரிபொருளாக இருக்கப்போவதாக தெரிவித்த அவர், இது டீசலை விட 40 சதவீதம் மலிவானது, குறைந்த அளவு மாசுபாட்டையே ஏற்படுத்தும் என்றார். மேலும்,  அடுத்த 3 ஆண்டுகளில் தங்க நாற்கரச் சாலைகளில் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஒரு திரவநிலை இயற்கை எரிவாயு நிலையத்தை அரசு அமைக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்