தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு - சட்டசபையில் மசோதா தாக்கல் செய்த அரசு
ஹரியானா மாநிலத்தில் தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை, அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை தட்டிப் பறிப்பதைத் தடுக்க, தனி இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வலுத்தது. இதற்கு செவிசாய்த்துள்ள ஹரியானா அரசு, இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.