அக்கா கணவரை கொடூரமாக கொன்ற இளைஞர் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

பெங்களூருவில் அக்கா கணவரை இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் நடுரோட்டில் கழுத்தை அறுத்துக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-12 07:52 GMT
பெங்களூரு ஆடுகொடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மல்லிகா, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பாக கணவரின் கொடுமையே காரணம் என தன் தம்பி ஜான் பாலிடம் கூறியதால் தன் அக்கா கணவர் ராஜேஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி ராஜேஷை, தன் நண்பர் தினேஷ் உடன் சேர்ந்து ஜான்பால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்