மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 12 ஆயிரத்து 822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து மூன்றராயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-08-09 03:10 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 12 ஆயிரத்து 822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து மூன்றராயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 275பேருடன், அம்மாநிலத்தில் இதுவரை 17 ஆயிரத்து 367 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் 11 ஆயிரத்து 82 பேர் மருத்தவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 3 ல​ட்சத்து 38 ஆயிரத்து 362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 26 லட்சத்து 47 ஆயிரத்து 20 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்