மதுவில் சானிடைசர் கலந்து குடித்தவர் உயிரிழப்பு - கட்டட தொழிலாளி மரணம் குறித்து போலீசார் விசாரணை

புதுச்சேரியில் சானிடைசர் கலந்து மது குடித்த கட்டட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2020-08-06 11:18 GMT
கொரோனா பரவல் எதிரொலியால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதன் ஒருபகுதியாக வீட்டில் இருந்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி குப்புசாமி, மது அருந்தியுள்ளார். அதில், சானிடைசர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மகன், குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சானிடைசர் கலந்து குடித்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்