சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ விவகாரம்... சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-04-29 14:40 GMT

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. பெருமாள் சன்னதியில் மே 24 முதல் 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த அறநிலையத் துறை திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமையிலான அமர்வு, வழக்கை கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்