VVPAT வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்

Update: 2024-04-29 14:42 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக, பாக்கியராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு 541 தொகுதிகளில் நடந்த தேர்தலில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமையிலான அமர்வு, இதே விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்