இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர்
நாடு தழுவிய அளவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
நாடு தழுவிய அளவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு உரையாற்ற உள்ளார். நோய்த்தடுப்பு பகுதி அல்லாத இடங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வேண்டுகோள்களை பிரதமர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீன மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் பிரதமரின் உரை எதைப் பற்றியது என்பது குறித்து பிரதமர் அலுவலகம் எதையும் தெரிவிக்கவில்லை..