N-95 முக கவசங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை மத்திய அரசு எச்சரிக்கை

N-95 முக கவசங்களை சட்ட விரோதமாக கொள்முதல் செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Update: 2020-05-22 09:27 GMT
N-95 முக கவசங்களை சட்ட விரோதமாக கொள்முதல் செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டும் உள்ளது. சில தனியார் மருத்துவ நிறுவனங்கள் N95 முக கவசங்களை கொள்முதல் செய்து வரும் நிலையில், நியாயமான விலையில் இந்த முக கவசங்களை விற்பனை செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த முக கவசங்களை கடத்துவதும், சட்ட விரோதமாக விற்பதும் தண்டனைக்கு உரியது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்