கூட்டம் கூட்டமாய் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் - பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் மக்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்தும் பேருந்துகளில் தொங்கியபடியும் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்தும் பேருந்துகளில் தொங்கியபடியும் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் உள்ள இடம்பெயருவோர், கூலித்தொழிலாளிகள் குடும்பத்துடன் நடந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அங்கு செல்லும் ஒரு சில பேருந்துகளில் தொங்கியபடி செல்கின்றனர். காசியாபாத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையின்றி மக்கள் கூட்டம் கூட்டமாய் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.