ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா - நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Update: 2020-03-09 08:23 GMT
கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.  பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை, ஒன்று கூடிய பெண்கள், அம்மனை வழிபட்டு பொங்கலிட்டனர். கொரோனா அச்சம் காரணமாக, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள், தங்கள் வீடுகளுக்கு வெளியே பொங்கலிட்டு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.  பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி திருவனந்தபுரத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்