அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழா ஏழாம் நாளான இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.