ராஜஸ்தான்: அரசு மருத்துவமனையில் அதிகளவிலான உயிரிழப்புகள் - கடந்த 24 நாட்களில் 77 குழந்தைகள் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் அதிகளவிலான குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-12-29 03:28 GMT
ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் அதிகளவிலான குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 940 குழந்தைகள் பலியாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான பச்சிளம் குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளன. இது குறித்து தீவிரமாக விசாரிக்க சுகாதாரத்துறை சார்பாக ஜெய்ப்பூரில் இருந்து மருத்துவமனைக்கு உயர் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்